மிக கடும் புயலாக மாறியது Amphan புயல் - 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மிக கடும் புயலாக மாறியது Amphan புயல் - 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மிக கடும் புயலாக மாறியது Amphan புயல் - 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Published on

Amphan புயலால் 5 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Amphan புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

 வங்கக் கடலில் உயர் உச்ச புயலாக இருந்த amphan புயல் தற்போது மிக கடும் புயலாக (super cyclone) மாறியுள்ளது. இது ஒடிஷா, மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அங்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Amphan புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com