ரத்து செய்யப்பட்ட பிரஷர் குக்கர்.. 2 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்த அமேசான்..பயனரின் பதிவு வைரல்!

ஆன்லைனில் புக் செய்யப்பட்டு, பின்பு ரத்து செய்த நிலையிலும் அந்தப் பொருள் திரும்பக் கிடைக்கப்பெற்றதாக நெட்டிசன் ஒருவர் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அமேசான்
அமேசான்எக்ஸ் தளம்
Published on

இன்று, உலகம் கைகளுக்குள் அடங்கிவிட்டது என்று சொன்னால் மிகையாகாது. ஆம், ஆன்லைன் வர்த்தகம் இன்று மனிதர்களின் வரமாகப் பார்க்கப்படுகிறது. ஒருகாலத்தில், தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு சந்தைக்குச் சென்றுவந்த காலம் போய், இன்று, அனைத்துப் பொருட்களையுமே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவிட்டால் போதும், அடுத்த இரண்டு நாட்களில் கைக்கு கிடைத்துவிடுகிறது. அந்த வகையில், ஆன்லைனில் புக் செய்யப்பட்டு, பின்பு ரத்து செய்த நிலையிலும் அந்தப் பொருள் திரும்பக் கிடைக்கப் பெற்றதாக நெட்டிசன் ஒருவர் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Jay என்பவர், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”2 ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான்" என தெரிவித்துள்ளார். அவரது பதிவில், பிரஷர் குக்கர் அக்டோபர் 1, 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 2024 அன்று ஆர்டரை பெற்றுள்ளார். இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் இருந்து பிரஷர் குக்கரை ஆர்டர் செய்துள்ளார். பின்னர் அவர் ஆர்டரை ரத்துசெய்து பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளார். ஆர்டரை ரத்து செய்தபோதிலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆர்டர் செய்த பொருள் அவரது வீட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்தே அந்தப் பதிவைப் போட்டுள்ளார். அவருடைய பதிவுக்கு பயனர்கள் பலரும் சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், 'செவ்வாய் கிரகத்தில் இருந்து டெலிவரி' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: கடத்தியவரிடமிருந்து பிரிய மனமில்லாமல் கதறி அழுத குழந்தை! ராஜஸ்தானில் ருசிகரம்.. நடந்தது என்ன? #Video

அமேசான்
2 முறை டேப்லெட் ஆர்டர்! பணம் பறித்ததா அமேசான்?.. ஏமாற்றமடைந்ததாக பெண் போட்ட எச்சரிக்கை பதிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com