தலைகீழாக தேசிய கொடி: மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய்

தலைகீழாக தேசிய கொடி: மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய்
தலைகீழாக தேசிய கொடி: மன்னிப்பு கேட்டார் அக்‌ஷய்
Published on

தேசியக் கொடியை தலைகீழாகப் பிடித்ததற்காக மன்னிப்பு கோரினார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண நேற்று சென்றார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார். ஸ்டேடியத்தில் இருந்தபடி தேசியக் கோடியுடன் இந்திய அணி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வந்தார். ஆனால் அவர் தேசியக்கொடியை அப்போது தலைகீழாக பிடித்திருந்தார். இதை கவனிக்காமல் அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து அவர் அந்த புகைபடத்தை நீக்கினார்.

இதையடுத்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசியக் கொடியை தெரியாமல் தலைகீழாகப் பிடித்துவிட்டேன். யாரையும் புண்படுத்தும் நோக்கில் செய்யவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com