“ திருப்பதி கோயிலில் உரிய மரியாதை கிடைப்பதில்லை”- கண்ணீருடன் நடிகை ரோஜா புகார்

“ திருப்பதி கோயிலில் உரிய மரியாதை கிடைப்பதில்லை”- கண்ணீருடன் நடிகை ரோஜா புகார்
“ திருப்பதி கோயிலில் உரிய மரியாதை கிடைப்பதில்லை”- கண்ணீருடன் நடிகை ரோஜா புகார்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதையுடன் சுவாமி தரிசனம் செய்ய தன்னை அனுமதிக்கவில்லை என சட்டமன்ற உரிமைக்குழு முன், நடிகை ரோஜா கண்கலங்கிபடி புகார் அளித்தார்.

ஆந்திர மாநில சட்டமன்ற உரிமைக்குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி தலைமையில், திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் பல்வேறு அம்சங்கள் குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்.


அப்போது உரிமைக்குழு முன்பு நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் ஆந்திர மாநில தொழிற்சாலைகள் துறை உட்கட்டமைப்பு கழகத் தலைவருமான நடிகை ரோஜா, தன்னை திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாரிகள் புறக்கணிப்பது பற்றியும், தன்னுடைய பதவிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தாருடன் சென்றாலும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது என்றும் கண்கலங்க முறையிட்டார்.


இது பற்றி நிருபர்களிடம் பேசிய ஆந்திர சட்டமன்ற உரிமைக்குழு தலைவர் கோவர்த்தன் ரெட்டி, ரோஜாவின் முறையீடுகள் பற்றி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com