தர்ஷனுக்கு டிவி வழங்கிய சிறைத்துறை.. குற்றப்பத்திரிகையில் வெளியான புதிய தகவல்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனுக்கு சிறைத்துறை அதிகாரிகள் தொலைக்காட்சி ஒன்றை வழங்கியுள்ளனர். இன்று காலை, தர்ஷனின் அறையில் 32 அங்குல தொலைக்காட்சியை நிறுவ சிறை அதிகாரிகள் அனுமதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்எக்ஸ் தளம்
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்ற ரசிகர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் தர்ஷனும் அவருடன் சேர்ந்த சிறைவாசிகள் இருவரும் சர்ச்சைக்குரிய வகையில் கொண்டாட்ட மனநிலையில் அமர்ந்திருக்கும் படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.

குறிப்பாக அப்புகைப்படத்தில் சிகரெட் பிடிப்பதும், காபி குடிப்பதும் பதிவாகி இருந்தது. அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி பேசுபொருளானது. இந்த வழக்கில், சிறை அதிகாரிகள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிறை விதிகள் தகர்க்கப்பட்டது பற்றி, தனித்தனியே 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதனிடையே, தர்ஷன் பெங்களூரு சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பெல்லாரி சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தர்ஷனின் தோழி பவித்ரா கவுடா உட்பட 3 பேர் மட்டும் பெங்களூரு சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: கட்சியில் இணைந்த வினேஷ் போகத்| “எனக்கு எதிரான போராட்டம் காங்கிரஸின் சதி” - பிரிஜ் பூஷண் சரண் சிங்

நடிகர் தர்ஷன்
சிறையில் புகைபிடிக்கும் நடிகர் தர்ஷன் போட்டோ! சிறப்பு சலுகையா? விசாரணையில் 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனுக்கு சிறைத்துறை அதிகாரிகள் தொலைக்காட்சி ஒன்றை வழங்கியுள்ளனர். இன்று காலை, தர்ஷனின் அறையில் 32 அங்குல தொலைக்காட்சியை நிறுவ சிறை அதிகாரிகள் அனுமதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தனது வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள விரும்புவதற்காகவும், வெளிஉலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆர்வமாக இருப்பதற்காகவும் தர்ஷன் சிறை அதிகாரிகளிடம் கடந்த வாரம் ஒரு தொலைக்காட்சியைக் கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்கோப்புப்படம்

அதன்பேரிலேயே அந்த தொலைக்காட்சி இன்று வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சிறை வழிகாட்டுதலின்படி தொலைக்காட்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தொலைக்காட்சி பழுதுபார்க்க வேண்டியிருந்ததால் தாமதம் ஏற்பட்டதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகர் தர்ஷன்
செருப்பால் அடித்த பவித்ரா.. கொலையை மறைக்க ரூ.40 லட்சம் கடன் வாங்கிய தர்ஷன்.. விசாரணையில் புது தகவல்!

இதற்கிடையே, தர்ஷனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பல புதிய தகவல்கள் வெளிவந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரேணுகா சுவாமி சைவ உணவு உண்பவர் என்பதை அறிந்துகொண்ட தர்ஷன் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள், அவரை அசைவ உணவு உண்ணும்படி வற்புறுத்தியதாகவும், அதை அவர் உண்ண முடியாமல் துப்பியபோது, ​​அதற்காக தர்ஷன் அவரை உதைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தர்ஷன்
தர்ஷன்எக்ஸ் தளம்

ரேணுகாசுவாமியை அவர்கள் பலமுறை தாக்கியதில் அவருக்கு ரத்தம் வெளிவந்த நிலையில் கிடந்துள்ளார். அப்போதும் அவரை தொடர்ந்து தாக்கியுள்ளனர். தர்ஷன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட செருப்பில் ரேணுகாசுவாமியின் ரத்தம் படிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், மறுநாள் காலை போலீசார் தர்ஷனை கைது செய்தபோது, ​​அவர் வேறு ஒரு ஜோடி காலணியை அணிந்திருந்தார். இதன்மூலம் கொலையில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தர்ஷன்
”நான் தான் பணிவிடை செய்வேன்”-போட்டி போட்டு பணிவிடை செய்த இரு கைதிகளால் சிக்கிய கன்னட நடிகர் தர்ஷன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com