பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 6 பேர் உயிரிழப்பு!

பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 6 பேர் உயிரிழப்பு!
பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு 6 பேர் உயிரிழப்பு!
Published on

பீகாரில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டெல்லியின் ஆனந்த் விஹாரில் இருந்து பீகாரின் ஜோக்பானி என்ற இடத்துக்கு சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜோக்பானி நகரில் இருந்து டெல்லியின் ஆனந்த் விகார் நோக்கி இன்று அதிகாலை வந்துகொண்டிருந் தது. அதிகாலை 3.52 மணிக்கு பீகாரின் வைஷாலி என்ற பகுதியில் வந்தபோது, திடீரென தடம் புரண்டது. ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை நேரம் என்பதால் ரயிலில் இருந்தவர்கள் அனைவரும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்தனர். அவர்களோடு பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியோனோர் குடும்பத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com