பெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை

பெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை
பெலுகான் வழக்கில் தீர்ப்பு : கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை
Published on

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெலுகான் என்ற பால் வியாபாரி கடந்த 2017 ஆம் ஆண்டு பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஜெய்ப்பூரில் இருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அல்வாரில் அவரது வாகனத்தை ஒரு கும்பல் வழிமறித்தது. பசு பாதுகாவலர்கள் எனத் தங்களை கூறிகொண்ட அந்தக் கும்பல் பெலுகானை கடுமையாக தாக்கியது. படுகாயமடைந்த பெலுகான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். பெலுகானை தாக்கியவர்கள் என செல்போனில் பதிவான வீடியோ மூலம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தானில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ராஜஸ்தான் போலீசார் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையில் பெலுகான் மீது பசுக்களை கடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று பெலுகான் உடன் இருந்த அவரது மகன்கள் இர்ஷாத் மற்றும் ஆரிஃப் ஆகிய இருவர் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. 

பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பெலுகான் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வீடியோவில் இருப்பவர்களின் உருவம் தெளிவாக இல்லை என்பதால், சந்தேகத்தின் பலனை கைது செய்யப்பட்டவர்களுக்கு சாதகமாக்கி, அவர்கள் 6 பேர் மீது குற்றம் சுமத்த முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

அதுமட்டுமின்றி பெலுகான் உயிரிழந்தது தொடர்பாக மருத்துவமனை அளித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் காயங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட மாரடைப்பால் அவர் இறந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததையும் அடிப்பையாக கொண்டு 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com