3 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட தம்பதி: அசாமில் அதிர்ச்சி

3 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட தம்பதி: அசாமில் அதிர்ச்சி
3 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட தம்பதி: அசாமில் அதிர்ச்சி
Published on

அசாமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் கொசைகாவன் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் பவுல்(52). சிலிண்டர் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி மோலிகா பவுல்(45). இந்த தம்பதிக்கு பூஜா பவுல், நேகா பவுல், சினேகா பவுல் என்ற 3 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாகியும் யாரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 5 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நிர்மல் பவுலுக்கு தொழில் சம்பந்தமாக ஏராளமான கடன் இருந்து வந்ததாகவும் அதனால் அவர் மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த குடும்பத்தினர் சிலரிடம் கடன் வாங்கியுள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிர்மல் பவுலின் முதல் மகள் பூஜா ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இரண்டாவது மகள் நேகா 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். மூன்றாவது மகள் சினேகா பத்தாம் வகுப்பு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com