உறவினரிடம் தகராறு: 40 வயது நபருக்கு தீ வைப்பு !

உறவினரிடம் தகராறு: 40 வயது நபருக்கு தீ வைப்பு !
உறவினரிடம் தகராறு: 40 வயது நபருக்கு தீ வைப்பு  !
Published on

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உறவினர்கள் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் 40 வயது நபர் ஒருவர் தீவைத்து கொளுத்தப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் விரோசாபாத் மாவட்டத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார் ராகேஷ் வர்மா. இவருக்கும் ராபின் எனும் தன்னுடைய உறவினருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராகேஷ் வர்மா கடைக்கு வந்த ராபின் அவரிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் தான் கொண்டு வந்த எரிபொருளை ராகேஷ் மீது ஊற்றி, அவருக்கு தீ வைத்துள்ளார்.

ராகேஷின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ராகேஷ்க்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவைத்து தப்பியோடிய உறவுக்காரரான ராபினை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com