கர்நாடகா: விவசாய பணியில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள், மின்னல் தாக்கியதில் பலியான சோகம்!

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தில் நேற்று மாலை இடி மின்னலுடன் திடீரென கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
மின்னல் தாக்கி 4 பேர் பலி
மின்னல் தாக்கி 4 பேர் பலிpt desk
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் யாத்கிரி அருகே ஜீனகேரா தாண்டா கிராமத்தில் விவசாய நிலத்தில் சுமார் 7 பேர் விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது மாலை நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளனர்.

Hospital
Hospitalpt desk

அப்போது மின்னல் தாக்கியதில், நேனு (18), சேனு (22), கிஷன் (30), சுமி பாய் (30) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மின்னல் தாக்கி 4 பேர் பலி
தமிழகத்தில் கேரள மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை! நடந்தது என்ன?

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த யாதகிரி கிராமப்புற போலீசார், இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com