ஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தும் கும்பல் கைது: 3 சிறுவர்கள் மீட்பு

ஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தும் கும்பல் கைது: 3 சிறுவர்கள் மீட்பு
ஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தும் கும்பல் கைது: 3 சிறுவர்கள் மீட்பு
Published on

ஆந்திராவில் சிறுவர்களைக் கடத்தி திருட்டு தொழிலுக்கு பயன்படுத்தி வந்த கும்பலை அம்மாநில போலீஸார்‌ கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கதிரி என்ற ஊரில் 3 சிறுவர்கள் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார் அ‌னந்தபூரைச் சேர்ந்த சுப்பாராயுடு என்பவரை கைது செய்தனர். சுப்பாராயுடு சிறுவர்களை கடத்தி பாபு என்பவரிடம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட குழந்தைகளை திருட்டில் ஈடுபடுத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீஸார், கடத்தப்பட்ட 3 சிறுவர்களையும் மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com