இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கேரளாவில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிதாக 25 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவிற்கு வருகை தந்துள்ள 16 இத்தாலிய சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். 

முன்னதாக கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக  கூட்டம் கூடுவதை தவிர்க்க சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்படி ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com