"விமானப் படை தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" அமித் ஷா

"விமானப் படை தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" அமித் ஷா
"விமானப் படை தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்" அமித் ஷா
Published on

விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை  பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்களை அழித்தது. ஆனால் இதில் உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து விமானப் படையினர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 350 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. இதனிடையே 350 பயங்கரவாதிகளை விமானப் படையினர் கொன்றதற்கான ஆதாரம் என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில் விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய அமித் ஷா, “ புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தற்சமயம் கொடுக்க முடியாது என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் என்ன நடந்தது..? புல்வாமா தாக்குதல் நடந்து 13-வது நாளிலேயே பிரதமர் மோடி அரசு, விமானப் படை தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்” என தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com