ராஜஸ்தான்: விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு

ராஜஸ்தான்: விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு
ராஜஸ்தான்: விபத்துக்குள்ளான பள்ளி பேருந்து - 2 குழந்தைகள் உயிரிழப்பு
Published on

ராஜஸ்தானில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பல்சுந்தா பகுதியில் பள்ளி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 40 குழந்தைகள் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காயமடைந்த பள்ளிக்குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த விவரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com