ஓடும் காரில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை!

ஓடும் காரில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை!
ஓடும் காரில் 17 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை!
Published on

17 வயது சிறுவனை 6 பேர் ஓடும் காருக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது

கொல்கத்தாவின் கிட்டர்போர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தன் பணியை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளான். அப்போது அவனுக்கு ஏற்கெனவே அறிமுகமான 6 பேர், காரில் வந்து அவனிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவனை கட்டாயமாக காருக்குள் ஏற்றியுள்ளனர்.

பிறகு ஓடும் காரில் அந்த சிறுவனை 6 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவனைத் தாக்கி அவனிடம் இருந்த ரூ.17 ஆயிரம் ரொக்கம் மற்றும் அவனது வெள்ளிச் செயினையும் பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 6 பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து தெரிவித்துள்ள காவலர்கள், ஓடும் காருக்குள் ஒருமணி நேரம் சிறுவனுக்கு பாலியல் சீண்டல் கொடுக்கப்பட்டுள்ளது.

பிறகு அவனை காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளனர். சிறுவனுக்கு சிராய்ப்புகளும், உடலில் காயங்களும் உள்ளன என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com