மாணவர்கள் புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு - தெலங்கானா அரசு அதிரடி

மாணவர்கள் புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு - தெலங்கானா அரசு அதிரடி
மாணவர்கள் புத்தக பைகளுக்கு கட்டுப்பாடு - தெலங்கானா அரசு அதிரடி
Published on

தெலங்கானாவில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் கொண்டுவரும் புத்தக பைகளுக்கு மாநில அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

தெலங்கானாவில் துவக்க பள்ளி மாணவர்கள் 6 முதல் 12 கிலோ வரையிலும், மற்ற வகுப்பு மாணவர்கள் 17 கிலோ வரையிலும் புத்தக சுமையைத் தூக்கிச் செல்கின்றனர். இதனால், மாணவர்களின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்தது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தெலுங்கானா புதிய கட்டுப்பாடுகள் அடங்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 

1 மற்றும் 2ம் வகுப்பு - 1.5 கிலோ

3,4 மற்றும் 5ம் வகுப்பு - 2-3 கிலோ

6 மற்றும் 7 ம் வகுப்பு - 4 கிலோ

8 மற்றும் 9 ம் வகுப்பு - 4.5 கிலோ

10ம் வகுப்பு          -   5 கிலோ
வரை புத்தகங்கள் சுமக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது என தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி நிர்வாகம் எந்த நோட்டு புத்தகங்களை கொண்டு வர வேண்டும். கொண்டு வரத் தேவையில்லை என்பதை மாணவர்களிடம் தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. துவக்க பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. பாடங்களில் அளிக்கப்படும் பயிற்சியானது அந்த பாடம் முடிந்த உடன் ஆசிரியர் மேற்பார்வையில் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளையும் அரசு பள்ளிகளுக்கு விதித்துள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு பாடங்களை குறிப்பிட்ட நாட்களில் முக்கிய பாடங்களில் மட்டும் அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com