+2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு ஏற்பாடுகள்

+2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு ஏற்பாடுகள்
+2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - அரசு ஏற்பாடுகள்
Published on

ப்ளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், அதற்காக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

2019 மார்ச் +2 பொதுத் தேர்வை 8,87,992 பேர் எழுதினர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தங்களது முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். இதுதவிர, தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். 

அதேபோல், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது பதிவு செய்த கைபேசி எண்ணிற்கு முடிவுகள் அனுப்பப்படும். ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை www.dge.tn.nic.in http:/www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களாகவும் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com