ரயில்வே துறையில் 1,40,640 காலியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு

ரயில்வே துறையில் 1,40,640 காலியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு
ரயில்வே துறையில் 1,40,640 காலியிடங்கள்... தேர்வு தேதி அறிவிப்பு
Published on

ரயில்வே துறையில் 1,40,640 காலியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

RRB NTPC உள்ளிட்ட நிலுவையில் உள்ள மற்ற பணி நியமனங்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது. அதாவது கிட்டத்தட்ட 35,208 பணியிடங்கள் தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால், கடைசி வரையில் தேர்வுகள் நடைபெறாமலே போனது. இதேபோல் இன்னும் பிற தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது. ஒட்டுமொத்தமாக சுமார் 3 கோடி பேர் RRB NTPC குரூப் டி உள்ளிட்ட தேர்வுகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த நிலையில், இந்தாண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் RRB NTPC உள்ளிட்ட நிலுவையில் உள்ள தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வுக்கான முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com