நீட் முதுநிலை தேர்வு 4 மாதங்கள் ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம்

நீட் முதுநிலை தேர்வு 4 மாதங்கள் ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம்
நீட் முதுநிலை தேர்வு 4 மாதங்கள் ஒத்திவைப்பு - பிரதமர் அலுவலகம்
Published on

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கொரோனா காரணமாக 4 மாதங்கள் வரை ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில் மருத்துவ மாணவர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் கொரோனா லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியில் ஈடுபடுவதால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக பிரதமர் அலுவலகத்தின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு அரப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com