செப்டம்பர் மாதத்தில் நீட்,ஜேஇஇ தேர்வுகள்:  ஒத்திவைக்க மம்தா பானர்ஜி கோரிக்கை

செப்டம்பர் மாதத்தில் நீட்,ஜேஇஇ தேர்வுகள்: ஒத்திவைக்க மம்தா பானர்ஜி கோரிக்கை

செப்டம்பர் மாதத்தில் நீட்,ஜேஇஇ தேர்வுகள்: ஒத்திவைக்க மம்தா பானர்ஜி கோரிக்கை
Published on

செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நீட்,ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமென்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ பிரதமருடன் நடந்த வீடியோ கான்பரன்சிங்கின் போதே பல்கலைக்கழக, கல்லூரி தேர்வுகளை செப்டம்பர் மாதத்துக்குள் நடத்த வேண்டுமென்ற யுஜிசியின் முடிவுக்கு எதிராக குரல்கொடுத்தேன். இப்போது செப்டம்பர் மாதம் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் தற்போதைய நிலையை கவனத்தில் கொண்டு பாதுகாப்பான சூழல் திரும்பும்வரை  இந்த தேர்வுகளை ஒத்திவைக்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது நமது கடமை” என்று தெரிவித்துள்ளார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com