திருச்சி: எஸ்பி வருண்குமார் அளித்துள்ள அவதூறு புகார் - மேலும் இருவர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அளித்துள்ள அவதூறு புகார் மீது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Accused
Accusedpt desk
Published on

செய்தியாளர்: லெனின்.சு

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில், 'என்னையும் எனது குடும்பத்தினர் பற்றியும் X வலைதளத்தில் ஆபாசமாக அவதூறாக பதிவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் கொடுத்திருந்தார்.

SP Varun kumar
SP Varun kumarpt desk

அந்தப் புகாரில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதலின் பேரில்தான் பதிவுகள் இடப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சீமான் உள்ளிட்டோர் மீது தில்லை நகர் போலீசார் வழக்குப் பதிவுச் செய்தனர். இதைத் தொடர்ந்து விருதுநகரைச் சேர்ந்த கண்ணன், மதுரையைச் சேர்ந்த திருப்பதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Accused
“மீண்டும் இந்த தவறை செய்யாதீங்க” - சுதா மூர்த்திக்கு தமிழ்நாட்டு பூசாரி கொடுத்த அட்வைஸ்... ஏன்?

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை விஸ்வநாதபுரம் தபால் தந்தி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22), கள்ளக்குறிச்சி களமருதூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சண்முகம் (34) ஆகியோரை இன்று தில்லைநகர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com