மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு !

மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு !
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு !
Published on

13 வயது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட உடற்பயிற்சி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த உத்தண்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அதேப் பகுதியில் உள்ளபள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மாநில அளவில் பங்குப் பெறும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பவர். மாணவி தினந்தோறும் உத்தண்டியில் உள்ள கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவருக்கு திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை மாணவிக்கு உடற்பயிற்சி கற்றுக்கொடுக்கும் போது மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது. அது தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அது தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவியிடம் உடற்பயிற்சி ஆசிரியர் மகேஷ் அத்துமீறியது உண்மை என தெரியவந்தது.

இதனையடுத்து மகேஷ் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com