சிவகங்கை: இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை... 5 பேர் கைது!

மானாமதுரை அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை; செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமார்
தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமார்pt desk
Published on

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (24). இவருக்கு, கணவரைப் பிரிந்திருந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பெண்ணை சந்திக்க அவரது ஊருக்குச் சென்ற அரவிந்த், அந்த ஊரிலிருந்த ஒரு தோப்பிற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு ஏற்கெனவே மது அருந்திக் கொண்டிருந்த வேறொரு ஊரை சேர்ந்த 5 பேர் அரவிந்தை அடித்து மிரட்டி, அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமார்
துரைப்பாக்கம்: படுகொலை செய்யப்பட்டு சூட்கேஸில் வீசப்பட்ட இளம்பெண்ணின் உடல்... ஒருவர் கைது!

இதன்பின் காயமடைந்த அரவிந்த் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். அப்போது அடிபட்ட காயம் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடந்தவற்றை போலீசில் வாக்கு மூலமாக கூறியுள்ளார்.

Arrested
Arrestedpt desk

அதன் அடிப்படையில் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமார் தவறி விழுந்து காலில் அடிபட்டதால் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தப்பிச் செல்ல முயன்ற முத்துக்குமார்
சென்னை: டெலிவரி கொடுக்க சென்ற இடத்தில் ஏற்பட்ட பிரச்னை... விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com