பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்: மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்: மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்: மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
Published on

பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 9 பேர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ராயப்பேட்டை அண்ணா சிலை அருகே வந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 4 பன்றிகளை அழைத்து வந்து, அவைகளுக்கு பூணூல் போட முயற்சித்தனர். அதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட பன்றிகளில் ஒன்று உயிரிழந்தது. மேலும் போராட்டத்திற்கு பயன்படுத்திய 4 பன்றிகளுக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவை மீட்கப்பட்டு வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 9 பேர் மீதும் ராயப்பேட்டை போலீசார் மிருகவதை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com