ஓமலூர்: பள்ளி மாணவி கடத்தல்- கொத்தனார் போக்சோவில் கைது

ஓமலூர்: பள்ளி மாணவி கடத்தல்- கொத்தனார் போக்சோவில் கைது
ஓமலூர்: பள்ளி மாணவி கடத்தல்- கொத்தனார் போக்சோவில் கைது
Published on

ஓமலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய கொத்தனார் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள மொலாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் சுபாஸ் (23). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுபாஸை கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோர் வசம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போக்சோ உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சுபாஸை சேலம் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com