சினிமா ஸ்டைலில் ஒரு காதல் கொலை: வகுப்பறையில் பகீர் சம்பவம்!

சினிமா ஸ்டைலில் ஒரு காதல் கொலை: வகுப்பறையில் பகீர் சம்பவம்!

சினிமா ஸ்டைலில் ஒரு காதல் கொலை: வகுப்பறையில் பகீர் சம்பவம்!
Published on

தான் காதலித்த பெண்ணை, காதலிக்கத் தொடங்கிய நண்பனை வெட்டிக்கொன்ற பள்ளி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகில் உள்ளது பைரேல் கிராமம். இங்குள்ள ஆண்கள் பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தவர்கள் ராஜேஷ் (16), ராகேஷ் (16). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). பத்தாம் வகுப்பு மாணவர்களான இவர்கள் உயிருக்கு உயிரான நண்பர்கள். எப்போதும் ஒன்றாகத்தான் சுற்றுவார்கள். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். ராஜேஷ், வேறு பள்ளி மாணவி ஒருவரைக் காதலிக்கத் தொடங்கியுள்ளார். அவளுக்கு காதல் கடிதம் எழுதச் சொல்லி ராகேஷிடம் கேட்பார். இவரும் எழுதிக்கொடுப்பார். இந்நிலையில் ராகேஷூம் அந்தப் பெண்ணிடம் காதல் வயப்பட்டார். காதல் என்று வந்தபின் நண்பனை பார்க்க முடியுமா? தானும் கடிதம் ஒன்றை எழுதி அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

’இப்படி கூட இருந்தே குழிபறிக்கிறானே’ என நினைத்த ராஜேஷுக்கு கோபம். அந்தக் கோபம் கொலை வெறியாக மாறியது. இதையடுத்து வீட்டில் இருந்து கரும்பு வெட்டும் அரிவாளை எடுத்து ஸ்கூல் பேக்கில் வைத்துக்கொண்டான் ராஜேஷ். அவனுக்கு துணையாக வேறொரு நண்பரும் சேர்ந்துகொண்டார். 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தேர்வு நடந்தது. எழுதிவிட்டு எல்லா மாணவர்களும் சென்று கொண்டிருந்தனர். சீக்கிரமாக வெளியே வந்த ராஜேஷ், வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரம் பாய்ந்துசென்று உள்ளே இருந்த ராகேஷை சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே அவன் பலியானான். இதைக் கண்டு மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர். இந்தச் சம்பவம் நடந்தது காலை 11.30 மணியளவில். 
‘யாராவது என்னைக் காட்டிக்கொடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன்’ என்று மிரட்டி விட்டு தப்பியோடிவிட்டான்.

அதிர்ச்சி அடைந்த பள்ளி தலைமையாசிரியர், போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் பஸ்சில் தப்ப முயன்ற ராஜேஷை போலீசார் கைது செய்தனர். 16 வயது சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான் ராஜேஷ். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com