மணிப்பூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

மணிப்பூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

மணிப்பூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்
Published on

மணிப்பூர் மாநிலத்தில் ஒரு வீட்டிலிருந்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது

மணிப்பூர் மாநிலம் மோரே என்ற ஊரில் உள்ள ஒரு வீட்டில் மிக அதிக அளவில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு அசாம் ரைஃபிள்ஸ் துணை ராணுவப் படைப்பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 54 கிலோ பிரவுன் சுகர் மற்றும் 154 கிலோ ஐஸ் மெத் என்ற போதைப்பொருள் சிக்கின.

போதைப்பொருள் சிக்கிய வீட்டின் உரிமையாளர் மியான்மரில் இருப்பதாகவும் அவரது கணவர் சீனாவை சேர்ந்தவர் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கும்பல்கள் தங்கள் பொருட்களை விற்பதற்கு வடகிழக்கு மாநிலங்களை ஒரு மையமாக வைத்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com