பப்ஜி மதன் மீதான குண்டர் சட்ட ரத்து தொடர்பான மனுவை விரைந்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்ட ரத்து தொடர்பான மனுவை விரைந்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
பப்ஜி மதன் மீதான குண்டர் சட்ட ரத்து தொடர்பான மனுவை விரைந்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
Published on
பப்ஜி மதன், தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னதாக ‘மதன்’ மற்றும் ‘டாக்சிக் மதன்’ 18 பிளஸ் போன்ற யூ-டியூப் சேனல்கள்  மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், அந்த சேனல்களின் நிர்வாகியான மதனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சில மாதங்களுக்கு முன் கைது செய்திருந்தனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் மதன் மீது காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜூன் 18 ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால் அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் ஜூலை 5 ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதை குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழக அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க தாமதம் ஆவதை தொடர்ந்து இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மதன் தரப்பிலிருந்து மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த புதிய மனுவில், “18 மாதங்களே ஆன எனது கைக்குழந்தையை கவனித்துக் கொண்டு, எனக்கான சட்ட போராட்டங்களை நடத்திவரும் என் மனைவி உடல் நலக்குறைவால் சிரமப்படுகிறார். அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் எனக்கும் சில உடல்நலக்குறைவு இருப்பதால் ஓய்வில் இருக்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். கடந்த 5 மாதங்களாக சிறையில் உள்ளேன். குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை விரைந்து விசாரிக்கவும்” என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி காவல்துறை தரப்பில் ”கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்ததால்தான் மதனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டியிருந்தது. இதை விரைந்து விசாரிக்க அவர்கூறும் காரணங்களை ஏற்க இயலாது. இதுபோன்ற காரணங்களுக்காக மனுவை அவசரமாக விசாரிக்கக் கூடாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என்று வாதிட்டார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை முன்கூட்டி விசாரிக்க வேண்டுமென்ற பப்ஜி மதனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com