ஆவடி: ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட முயன்றதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு

ஆவடி: ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட முயன்றதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு
ஆவடி: ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட முயன்றதாக 14 பேர் மீது வழக்குப்பதிவு
Published on
சென்னையை அடுத்த ஆவடி அருகே ரேக்ளா பந்தயத்தில் ஈடுபட முயன்றதாக 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
11 குதிரைகள் மற்றும் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வெள்ளனூர் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, காவல்துறையினர் அங்கு விரைந்தனர். திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இருந்து குதிரைகளை கொண்டு வந்த வாகனங்களை மடக்கி பிடித்தனர். இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், குதிரை உரிமையாளர்கள் உள்பட 40 பேரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com