கிருஷ்ணகிரி: பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரம் - மதபோதகர் கைது

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதபோதகர் கைது
மதபோதகர் கைதுpt desk
Published on

செய்தியாளர்: பழனிவேல்;

கிருஷ்ணகிரி தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தி, மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை, சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் அக்குழுவினர், முக்கிய குற்றவாளியான சிவராமனின் நெருங்கிய நண்பரான டேனியல் அருள்ராஜை கைது செய்துள்ளனர்.

sexual harres
sexual harresfile

ஜிம் மாஸ்டராகவும், மத போதகராகவும் இருந்து வந்த டேனியல் அருள்ராஜ், சிவராமனின் குற்றச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில், தனியார் பள்ளியின் பெண் முதல்வர், மாவட்ட என்.சி.சி ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதபோதகர் கைது
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்கியது ஏன்? விஷச்சாராய வழக்கில் நீதிமன்றம் கேள்வி

முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com