மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல்

மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல்

மதுரையில் ரூ.1 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் பறிமுதல்
Published on

மதுரையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, பழைய 500, 1000 நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

எல்லீஸ் நகரில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு காவல்துறையினர், அவ்வழியாக வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர். அ‌ப்போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை சோதனை செய்த போது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அவர்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன் பிரபு, பாலாஜி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடம் இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com