“குடும்பத்துக்கு அவப்பெயர் வந்துவிடும் என பயந்தேன்” - 2 மகள்களை விஷம் கொடுத்து கொன்ற தாய்

“குடும்பத்துக்கு அவப்பெயர் வந்துவிடும் என பயந்தேன்” - 2 மகள்களை விஷம் கொடுத்து கொன்ற தாய்
“குடும்பத்துக்கு அவப்பெயர் வந்துவிடும் என பயந்தேன்” - 2 மகள்களை விஷம் கொடுத்து கொன்ற தாய்
Published on

திருச்சி அருகே தனது இரண்டு மகள்களை விஷம் கொடுத்து கொன்ற தாய் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு லோகநாதன்(15) என்ற மகன், கோகிலா(13), லலிதா(11) என இரு மகள்கள் உள்ளனர். தனது கணவர் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், சாந்த மீனாவின் மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக கூறி வீட்டில் இருந்த உறவினர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கோகிலா, லலிதா ஆகியோரை சிகிச்சைக்கு அனுமதித்தனர். 

முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிகள் இருவரும் வெள்ளிக்கிழமை ஒன்றன்பின் ஒன்றாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி மூலம் மணப்பாறை காவல்நிலையத்தில் சாந்தமீனா சரணடைந்தார்.

“கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் நிலையில், தனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது. அதனை எனது மகள்கள்தான் எடுத்தனர். அவற்றால் தனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் சிறுமிகளுக்கு ஞாயிறு மாலை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து சாந்தமீனாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com