‘2 மகள்களுடன் சிலிண்டரை திறந்துவைத்து மிரட்டிய நபர்’ விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி!

‘2 மகள்களுடன் சிலிண்டரை திறந்துவைத்து மிரட்டிய நபர்’ விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி!
‘2 மகள்களுடன் சிலிண்டரை திறந்துவைத்து மிரட்டிய நபர்’ விசாரிக்க சென்ற போலீசார் அதிர்ச்சி!
Published on

சென்னையில் மனைவியை கொடுமைப்படுத்திய புகாரில் போலீசார் விசாரிக்க சென்றதால் கணவர் தனது 2 மகள்களையும் வீட்டில் வைத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் ஏரிதிட்டம் 6 வது தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் மாயவன்-அமுதா தம்பதியினர். இவர்களுக்கு 13 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக , திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமுதா புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அந்தப் புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபாராணி சம்பவ இடத்திற்கு விசாரணை செய்ய இன்று சென்றார். அப்போது தனது இரண்டு மகள்களோடு வீட்டிற்குள் சென்று பூட்டி கொண்ட மாயவன் கேஸ் சிலிண்டரை நடு வீட்டில் வைத்து திறந்து வைத்து கொளுத்தி கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மற்றும் போலீசார் கதவை உடைத்து சென்று 2 மகள்களையும் மீட்டனர். ஆனால் மாயவன் வீட்டை விட்டு வெளியே ஓடி சென்று சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த கார்கள் மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து நொளம்பூர் போலீசார் அவரிடம் சமாதானமாக பேசி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com