குன்றக்குடி கோயில் யானை
குன்றக்குடி கோயில் யானைpt desk

குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரம் - பாகன் கைது

குன்றக்குடி கோயில் யானை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் பாகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

செய்தியாளர்: நாசர்

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி கோயில் யானை யோகலட்சுமி, கோயில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் 13-ஆம் தேதி கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், கால்கள் கட்டப்பட்டிருந்ததால், யானையால் வெளியேற முடியாமல் தீயில் சிக்கியது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த கோயில் யானை யோகலட்சுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

Arrested
Arrestedfile
குன்றக்குடி கோயில் யானை
அமராவதி முதலை பண்ணை: கீழே கிடந்த தங்கச் சங்கிலியை மீட்டு சிறுவர்கள்!

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், யானையின் பாகன் கார்த்திக், அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com