“இளம்பெண் தற்கொலையில் மர்மம் இருக்கிறது”- நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்

“இளம்பெண் தற்கொலையில் மர்மம் இருக்கிறது”- நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்
“இளம்பெண் தற்கொலையில் மர்மம் இருக்கிறது”- நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்
Published on

மதுரையில் திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கதறி அழுதனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலகாரன்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரின் இளைய மகளான சந்தரேஸ்வரியை மேலூர் அருகே உள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பழனிக்குமார் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 04 ஆம் தேதி சந்தரேஸ்வரி  வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக மணமகன் வீட்டார் கொட்டாம்பட்டி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த மணமகள் வீட்டார் சந்தரேஸ்வரி இறப்பில் மர்மம் இருப்பதாகவும், வரதட்சணை கொடுமை காரணமாக கணவரின் குடும்பத்தினர் மற்றும் அவரது அண்ணன் வீட்டார் அவரை கொலை செய்து இருக்கலாம் என்றும் கூறினர். இது மட்டுமின்றி சந்தரேஸ்வரி இறப்பிற்கு நீதி வேண்டும் என்று கூறி சந்தரேஸ்வரியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கதறி அழுதனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com