ஈரோடு| சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த நபர்.. வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி!

ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் சட்டவிரோதமாக வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த வெடி மருந்துகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Accused
Accusedpt desk
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள சீலம்பட்டியில் பானுமதி என்பவரின் தோட்டத்து வீட்டில் இளங்கோ என்பவர் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இளங்கோ சுற்றித் திரிந்து வருவதாக பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பெருந்துறை காவல்துறையினர் இளங்கோ தங்கியிருந்த வீட்டை சோதனை செய்துள்ளனர்.

வெடி மருந்துகள் பறிமுதல்
வெடி மருந்துகள் பறிமுதல்pt desk

அப்போது வீடு முழுவதும் வெடி மருந்துகள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 5 கிலோ கரித்தூள், 3 கிலோ அலுமினிய பவுடர், 2 கிலோ அலுமினிய இரும்பு பவுடர், 2 கிலோ வெடி உப்பு, 100 ராக்கெட் குச்சிகள், உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சட்டவிரோதமாக வீட்டில் வெடிமருந்துகளை பதுக்கி வைத்திருந்த இளங்கோவை பெருந்துறை காவல் துறையினர் கைது செய்தனர்.

Accused
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரம்|தந்தை மகன் அடுத்தடுத்து இறப்பு; மரணத்தில் எழும் சந்தேகங்கள்!

இதைத் தொடர்ந்து வெடி மருந்துகளை எதற்காக பதுக்கி வைத்திருந்தார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வெடி பொருட்களை மயிலம்பாடியில் உள்ள வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com