திண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி - தம்பதி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி - தம்பதி உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 கோடி மோசடி - தம்பதி உட்பட 3 பேர் கைது
Published on

திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி 40 கோடி மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் கைது 7 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் தர்விஸ் அக்பர். இவரது மனைவி ரென்சியா பாத்திமா, கருப்பசாமி மற்றும் 7 பேர் சேர்ந்து உதய நிலா, உதயம், உதயதாமரை என 3 நிதி நிறுவனங்களை கடந்த 2 வருடங்களாக நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் மொத்தமாக பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் வட்டி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் மாதந்தோறும் பொதுமக்களிடம் இருந்து 5 லட்சம், 10 லட்சம், 2 லட்சம் ஒரு லட்சம் என ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளனர். மேலும் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் தங்களது கிளை நிறுவனங்களை துவங்கி நடத்தி வந்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை முதலீடு செய்தனர். அதேபோல் சீட்டிலும் பணம் கட்டி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென அனைத்து நிறுவனமும் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொது மக்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இதேபோல் தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட நபர்கள் 550 பேர் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ரூ. 40 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், உத்தமபாளையம் அருகே உள்ள வீட்டில் பதுங்கியிருந்த தர்விஸ் அக்பர், அவருடைய மனைவி ரென்சியா பாத்திமா, கருப்பசாமி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com