“மயங்கிவிழுந்துட்டார்” - சேர்ந்து வாழ்ந்தவரை தள்ளிவிட்டு நாடகமாடிய பெண்! மரணத்தில் திடீர் திருப்பம்!

பெருங்குடி ரயில் நிலையத்தில் முதியவரை தள்ளிவிட்டு கொலை செய்து நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார்.
Accused with police
Accused with policept desk
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேந்தவர் முனியம்மாள் (50). கணவரை இழந்த இவர், ரயில் நிலையம் ஓரமாக தங்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அதேப் பகுதியை சேர்ந்த சங்கர்( 60), என்ற முதியவரும் பெருங்குடி ரயில் நிலையம் ஓரமாக தங்கி வந்த நிலையில், இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

murder
murderpt desk

இந்நிலையில், கடந்த 17ம் தேதி சங்கர் மயங்கி விட்டதாக அனைவரிடமும் முனியம்மாள் கூறியுள்ளார். அதனை நம்பிய திருவான்மியூர் அரசு இருப்புப்பாதை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முனியம்மாள் சங்கரை பிடித்து கீழே தள்ளிவிடும் காட்சி பதிவாகி இருந்தது.

Accused with police
"Adjust பண்ணிக்கோமா"- கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு நடந்தகொடூரம்; காக்கவேண்டிய ஆசிரியை செய்தசெயல்!

இதனையடுத்து முனியம்மாளை கைது செய்த ரயில்வே போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தள்ளிவிட்டதாகவும் அதில், இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com