சென்னை | பெண் மருத்துவருக்கு ஆபாச படம் அனுப்பி மிரட்டியதாக உடன் பயின்ற மருத்துவர் கைது!

சென்னையில் பெண் மருத்துவருக்கு ஆபாச படம் அனுப்பிய மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Doctor arrested
Doctor arrestedpt desk
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலை, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கௌதம் (32), இவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி குரோம்பேடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், பெண் மருத்துவர் கடந்த 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பாண்டிச்சேரியில் உள்ள கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த போது அவருடன் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் குமார் (27), என்பவரும் படித்து வந்துள்ளார். இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

Arrested
Arrestedfile

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெண் மருத்துவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் சுரேஷ் குமார், பெண் மருத்துவரின் சமூக வலைதள பக்கத்திலும், செல்போன் எண்ணிலும் ஆபாச படங்கள் அனுப்புவது, ஆபாசமாக பேசி பதிவிடுவது, கணவன் மனைவி இருவரின் படத்தையும் போட்டு உன் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து விடுவேன் என மிரட்டி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

Doctor arrested
தருமபுரி: அனுமதியின்றி மருந்துக்கடை நடத்தியதோடு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

இதனால் பெண் மருத்துவரின் கணவர் ராஜேஷ் கௌதம், பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மருத்துவர் சுரேஷ் குமாரை கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com