சென்னை: இருவேறு இடங்களில் நடந்த வாகன சோதனயில் சிக்கிய 7.6 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: இருவேறு இடங்களில் நடந்த வாகன சோதனயில் சிக்கிய 7.6 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை: இருவேறு இடங்களில் நடந்த வாகன சோதனயில் சிக்கிய 7.6 கிலோ கஞ்சா பறிமுதல்
Published on

பல்லாவரத்தில் நடைபெற்ற வாகன சோதனையில் 7 கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அடுத்த தாம்பரம் வள்ளுவர் குருகுலம் அருகே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற மூன்று பேரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் பையில் 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் மூவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜானி (எ) ஜோசப்பிரகாஷ் (33), மாரியப்பன் (42), சிவா (27), மூவரையும் கைது செய்து 6 கிலோ கஞ்சா ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல் பல்லாவரம் தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதித்ததில் பைக்கில் கஞ்சா வைத்திருந்தனர். கஞ்சா வைத்திருந்த வியாசர்பாடியை சேர்ந்த தினா (எ) தினேஷ் குமார் (26), டேனியல் (18), இருவரையும் கைது செய்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com