பணமோசடி வழக்கு: நடிகர் ’தாடி’ பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

பணமோசடி வழக்கு: நடிகர் ’தாடி’ பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!
பணமோசடி வழக்கு: நடிகர் ’தாடி’ பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!
Published on

பண மோசடி வழக்கு தொடர்பாக, நடிகர் ’தாடி’ பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

திருப்பூரில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் புகார் அளித்திருந்தார். அதில், விஷ்ணுவர்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கையாடல் செய்த பணத்தில், கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக நடிகர் பாலாஜிக்கு 5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. 
நிகழ்ச்சியை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாததோடு பாலாஜி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் ’தாடி’ பாலாஜி இன்று ஆஜரானார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com