கோவை: புரோட்டாவிற்கு சால்னா கேட்டு தகராறு - ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிவு

கோவையில் புரோட்டாவிற்கு சால்னா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் தாக்கியதாக இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிவு
ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிவுpt desk
Published on

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பல்வேறு பிரியாணி உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள பிரியாணி கடைக்குச் சென்ற இருவர், புரோட்டாவிற்கு சால்னா கேட்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. உடனடியாக ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா இருவரையும் சமாதானப்படுத்தி அவர்களுக்கு வேண்டியதை தர முற்பட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆத்திரமாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Police station
Police stationpt desk

இதையடுத்து அதில் ஒருவர் கத்தியால் ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லாவை தாக்கியுள்ளார். இதனால் பதற்றமைந்த கடை ஊழியர்கள் உடனடியாக உக்கடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற காவலர்கள் தகராறில் ஈடுப்பட்டவர்களை அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கரீம் மற்றும் சமீர் என்பது தெரியவந்தது.

ஹோட்டல் உரிமையாளரை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிவு
கேரளா: முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட மின்சாரம் - மாவு மில் உரிமையாளரின் வினோத போராட்டம்

பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் அமானுல்லா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com