டிக்டாக் உபயோகிக்கும் பெண்களா நீங்கள் ! கொஞ்சம் உஷார்

டிக்டாக் உபயோகிக்கும் பெண்களா நீங்கள் ! கொஞ்சம் உஷார்
டிக்டாக் உபயோகிக்கும் பெண்களா நீங்கள் ! கொஞ்சம் உஷார்
Published on

டிக்டாக், டப்ஸ்மாஷ் செயலிகளில் வீடியோ வெளியிடும் பெண்களிடம் ஆசைவார்த்தைக் கூறி பாலியல் தொழிலில் சிக்க வைக்கும் இடைத்தரகர்கள்.

டிக் டாக், மீயூசிக்கலி, டப்மாஸ் போன்றவை மூலம் பெண்களுக்கு வலைவீசி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக இடைத்தரகர் பூங்கா வெங்கடே‌ன் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.டி ஊழியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்த பூங்கா வெங்கடேசன், கடந்த 6ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரை விபச்சார தடுப்புப்பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. 

சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி பெண்கள், விளம்பரம் மற்றும் சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்களை ஆசை வார்த்தைக் காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பூங்கா வெங்கடேசன் கூறியுள்ளார். மேலும், டிக்டாக், டப்ஸ்மாஸ் போன்ற செயலிகளில் சினிமா, ‌நாடகங்களில் வாய்ப்பு கிடைக்கும் என அதிக வீடியோக்கள் வெளியிடும் பெண்க‌ளை குறி வைத்தும் பாலியல் இடைத்தரகர்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது.

அதனால், இது போன்ற செயலிகளை பயன்படுத்தும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த பூங்கா வெங்கடேசன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com