மாமல்லபுரம் காவலாளியை தாக்கிய விவகாரம்: வீடியோ வைரலான நிலையில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!

மாமல்லபுரத்தில் தனியார் காவலாளியை தாக்கிய விவகாரத்தில், 3 பேரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
காவலாளி தாக்கப்பட்ட விவகாரம்: மூவர் கைது
காவலாளி தாக்கப்பட்ட விவகாரம்: மூவர் கைதுபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஐந்து ரதம் பகுதியில் தனியார் நிறுவனமொன்றி காவலாளி ஏழுமலை என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நோ பார்க்கிங் பகுதியில் பணியில் இருந்தபோது கார் ஒன்று வந்துள்ளது. அதனை தடுத்த காவலாளி ஏழுமலை, “இந்த வழியில் செல்லக் கூடாது” என காரில் வந்தவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் ஆத்திரமடைந்து, காரில் இருந்து இறங்கிவந்து ஏழுமலையை அடித்து உதைத்துள்ளனர்.

Police station
Police stationpt desk

அங்கிருந்த நபர்கள் இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்தக் காட்சிகள் சமூக வளதளங்களில் வைரலான நிலையில், ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், தாம்பரம் அடுத்த முடிச்சூரைச் சேர்ந்த பிரபு இன்பதாஸ், சண்முகப்பிரியா, கீர்த்தனா ஆகிய மூன்று நபர்களை மாமல்லபுரம் போலீசார் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீடியோ வைரலானதை அடுத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவலாளி தாக்கப்பட்ட விவகாரம்: மூவர் கைது
சாலை விபத்து மரணங்களில் தமிழகத்துக்கு 2-வது இடம்.. 6 மாநிலங்களில் மட்டும் நிகழும் 55% உயிரிழப்புகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com