வேலூர்: வெளி மாநிலத்திற்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே வெளி மாநிலத்திற்கு கடத்தப்படவிருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப் பொருள் வழங்கள் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்துள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர்கள்
ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர்கள்pt desk
Published on

செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பக்காலபள்ளி பகுதியில் சிலர் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு புலனாய்வு அதிகாரிகள் பக்காலபள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Ration rice seized
Ration rice seizedpt desk

அப்போது ஒரு வீட்டில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த அதிகாரிகள், விசாரணை நடத்தினர். அதன்முடிவில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் குமார் (28) மற்றும் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கதிரவன் (38) அருண் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தலில் கைதானவர்கள்
சென்னை: ஓடும் ரயிலில் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பில் ஈடுபட்ட நபர் கைது

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட அரிசி, குடியாத்தம் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வேலூர் குடிமைப் பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com