கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன? - நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் எச்சரிக்கை

கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன? - நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் எச்சரிக்கை
கருப்புப் பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன? - நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் எச்சரிக்கை
Published on

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை அச்சுறுத்தும் விதமாக மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சை நோய் தாக்குவது தெரியவந்துள்ளது. மகாராஷ்ட்ரா, பீகாரைத்தொடர்ந்து தமிழகத்திலும் இந்த பாதிப்பு தலையெடுத்துள்ளது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்புப் பூஞ்சை காற்றில் இருக்கக்கூடியது. மூக்கில் உள்ள சைனசில், மியூகஸ் திரவத்தை பாதித்து கண் மற்றும் மூளை என வேகமாக பரவக்கூடியது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு தொற்றாது. ஆனால், தொற்றியவருக்குள் வேகமாக பரவக்கூடியது. இதனால் இறப்பு சதவிகிதமும் அதிகம். இந்த நோய்க்கான அறிகுறிகள் என்ன என்று விளக்குகிறார் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவர் திரிவேணி.

இந்த கருப்பு பூஞ்சை தொற்று நீரிழிவு நோயாளிகளை அதிகம் பாதிப்பதால் கருப்பு பூஞ்சை தாக்காமல் இருக்க என்ன செய்யக்கூடாது என்று டாக்டர் மோகன் விவரிக்கிறார்

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு ஆரோக்கிய உணவும், நோய் எதிர்ப்புத்திறனை வலுப்படுத்துவதும் மிகவும் அவசியம் என்பது மருத்துவர்களின் முக்கிய அறிவுறுத்தலாக இருக்கிறது.

கருப்புப் பூஞ்சை நோய்:

  • மூக்கில் உள்ள சைனசை பாதித்து, கண், மற்றும் மூளையை பாதிக்கக்கூடியது
  • மூக்கில் உள்ள சைனசை பாதிக்கக் கூடியது
  • தொற்று நோய் கிடையாது, வேகமாக பரவக்கூடியது, இறப்பு சதவிகிதம் அதிகம்

கருப்புப் பூஞ்சை நோய் - அறிகுறிகள்

  • கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, காய்ச்சல்
  • முகத்தில் வீக்கம், வலி
  • பார்வை குறைபாடு, பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது
  • மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது

கருப்புப் பூஞ்சை நோய் எப்படி தொற்றுகிறது?

  • காற்றில் பூஞ்சைகள் பரவியிருக்கும்
  • அழுகிய காய்கறிகள், பழங்களில் இருக்கும்
  • சுவாசிக்கும்போது மூக்கு திசுக்களை பாதிக்கும்
  • ஆரோக்கியமான நபருக்கு பூஞ்சையால் பாதிப்பு கிடையாது
  • நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளவர்களை பாதித்து கண், மூளையை பாதிக்கும்

கருப்புப் பூஞ்சை நோய் - முன்னெச்சரிக்கை

  • ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம்
  • சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும்
  • கொரோனா சிகிச்சையின் போது ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்வதால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்
  • ரத்த சர்க்கரை அளவை சரிபார்க்க வேண்டும்
  • உடற்பயிற்சி செய்ய வேண்டும்

கருப்புப் பூஞ்சை நோய் - கொரோனா பாதித்தவர்கள் என்ன செய்யவேண்டும்?

  • கொரோனாவில் இருந்து குணமடைந்தபின் சத்தான உணவு எடுத்துக்கொள்ளவேண்டும்
  • அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்
  • வயல், தோட்டத்தில் பூஞ்சைகள் அதிகம் காணப்படும்
  • வெளியே செல்ல நேர்ந்தால் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com