புதிய வகை கொரோனா மிகவும் ஆபத்தானது - ராகுல்காந்தி எம்.பி

புதிய வகை கொரோனா மிகவும் ஆபத்தானது - ராகுல்காந்தி எம்.பி
புதிய வகை கொரோனா மிகவும் ஆபத்தானது - ராகுல்காந்தி எம்.பி
Published on

உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் புதியவகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வகை, டெல்டா வகையைக்காட்டிலும் மோசமானது என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது எனக் கூறியுள்ளார். மேலும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும், தடுப்பூசி விவரங்களை வெளியிடுவதில் எந்தவித ஒளிவுமறைவும் இருக்கக்கூடாது எனவும் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com