சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழப்பு

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழப்பு
Published on

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மட்டும் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த மூன்று நாட்களாக, நாள்தோறும் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டி வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தமாக 24,586 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13,706 பேர் குணமடைந்துள்ளனர். 10,680 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 197 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று மட்டும் கொரோனா வார்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் ஆவார். 6 பேர் கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பிரேதம் மீண்டும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 9 மணிக்கு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்தனரா இல்லையா என்பது தெரியவரும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com