ஹிட்லரின் மறுபிறவி: மத்திய அமைச்சர் மீது பிரகாஷ் ராஜ் சாடல்

ஹிட்லரின் மறுபிறவி: மத்திய அமைச்சர் மீது பிரகாஷ் ராஜ் சாடல்

ஹிட்லரின் மறுபிறவி: மத்திய அமைச்சர் மீது பிரகாஷ் ராஜ் சாடல்
Published on

தேசிய வாதத்துக்குள் மதத்தை எப்படி இழுக்கலாம் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய அமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே, ’தேசியவாதமும் இந்துத்துவாவும் ஒன்றுதான். அது வேறு வேறு விஷயங்கள் இல்லை’ என்று கூறியிருந்தார். உத்தர கன்னடா தொகுதியை சேர்ந்த அவருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டரில், ‘தேசியவாதமும் இந்துத்துவாவும் ஒன்றுதான் என்று கூறியிருக்கிறீர்கள். தேசியவாதத்துக்குள் ஏன் மதத்தை கொண்டு வருகிறீர்கள்? இந்துக்கள் அல்லாதவர்களை என்ன சொல்வீர்கள்?

அம்பேத்கர், அப்துல்கலாம், ஏ.ஆர்.ரகுமான், குஷ்வந்த் சிங், அம்ரிதா பிரிதம், டாக்டர் வர்கீஸ் குரியன் உள்ளிட்ட பலரால்தான் நம் நாடு பெருமை கொள்கிறது. மனிதத்தை மட்டும் நம்புகிற, மதநம்பிக்கை இல்லாத என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையா? யார் நீங்கள்? உங்கள் நோக்கம் என்ன? நீங்கள் ஜென்மத்தை நம்புகிறீர்கள் என்பதால் நீங்கள்தான் ஹிட்லரின் மறுபிறவி' என்று கூறியுள்ளார்' என்று கூறியுள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com