“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்

“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்
“அப்புறம் யாரும் விஷாலுக்கு பெண் தர மாட்டார்கள்” - வரலக்ஷ்மி வருத்தம்
Published on

நடிகர் விஷாலின் திருமணம் எப்போது என நடிகை வரலக்ஷ்மி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பலரும் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். நடிகர் விஷாலின் கல்யாணம் எப்போது என்பதுதான் அது. அவர் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்த பிற்பாடுதான் கல்யாணம் என ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால் அந்தக் கட்டிடம் இப்போதைக்கு முடியும் வேலையாக தெரியவில்லை. ஆகவே அவர் விரைவில் திருமணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என அவரது பெற்றோர் அழுத்தம் தந்து வருவதாக தகவல். 

ஆனால் அவர் வரலக்ஷ்மியை விரும்பி வருவதாகவும், அவரையே மணம் முடிக்க இருப்பதாகவும் சில வருடங்களாகவே சினிமா இண்டரஸ்ட்ரியில் ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் இதற்கு இதுவரை மறுப்பும் கூறவில்லை. எதிர்ப்பும் எழுப்பவில்லை. ஆகவே அந்தச் செய்தி எப்போதும் இந்த இருவரையும் நோக்கி கேள்வியாக முன் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மி ‘சண்டகோழி2’வில் விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார். அதற்கான ஊடக சந்திப்பு நடந்த போது அவரிடம் விஷால் திருமணம் குறித்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு வரலக்ஷ்மி நேரடியாக பதில் தரவில்லை. ஆனாலும் சுற்றி சுற்றி சில விஷங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர், “எல்லோரும் கேட்டுட்டாங்க. தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்கோ. அப்புறம் இதுக்கு மேல இழுத்துகிட்டே போனா வயசாகிடுச்சுனு அப்புறம் யாரும் உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டாங்கனு நானே சொல்லிட்டேன். நானே பல பொண்ணுகளை காட்டினேன். ஆனா அவர் வேண்டாம்னு சொல்றார். நடிகர் சங்கம் கட்டிடன் எப்ப கட்டி முடிக்குறது. இவர் எப்ப கல்யாணம் பண்ணிக்குறது? இவர் ஏதோ அதை ஒரு சாக்கா பயன்படுத்திக்கிறாருனு நான் நினைக்கிறேன். 

என்னை பொருத்தவரை விஷாலின் ரியல் ஃலைப்பில் நான் ஃப்ரெண்ட். ரீல் லைஃப்பில் ஒரு வில்லி. எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. விரைவில் நானும் அரசியலுக்கு வருவேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com